மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கேற்ப வேளாண் தொழிலை எளிமைப்படுத்த பலவித கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன.
அவற்றுள் தீவனங்களை நறுக்குவதற்கான சில இயந்திரங்களும் பயன்பாட்டில் உள்ளன. மாட்டுத்தீவனம் வெட்டும் இயந்திரம்
எங்கள் இயந்திரம் 1 HP Single Phase மோட்டாரில் மின்சாரத்தில் இயங்குகிறது. மண்புழுவிற்கு உணவு தயாரிக்கவும் மற்றும், மாட்டுப்பண்ணை, குதிரைப் பண்ணை வைத்திருப்போருக்கும் இவற்றுக்கு வேண்டிய தீவனங்கள் தயாரிக்கும் கம்பெனிகளுக்கும் மிகவும் உபயோகமானது.
இந்த இயந்திரத்தைப் பிரித்து எடுத்து கார் டிக்கியில் கொண்டு சென்று வேண்டிய இடத்தில் மீண்டும் 10 நிமிடத்தில் பூட்டி ஓட்டலாம். மிகவும் எளிமையானதும் நீடித்து உழைப்பதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.
தீவனங்களை பொடிப் பொடியாக நறுக்கி உபயோகிப்பதால் கழிவு வருவதில்லை. இப்போது ஆகும் தீவனச் செலவில் 3ல் 1 பங்கு மட்டுமே செலவாகும் 3 மாதத்தில் இயந்திரங்களின் செலவை சம்பாதித்து விடலாம். சிக்கமானது நீடித்து உழைப்பது.
எங்களது தொழிற்சாலையில் எல்லா வேலை நாட்களிலும் செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது.
மாட்டுத்தவீவனம், தென்னை கைமட்டை மற்றும் வேளாண் கழிவுப் பொருட்களை தூளாக்கும் இயந்திரம்
இயந்திரம் மூன்று கத்திகள் கொண்டது. 3HP மோட்டாரில் இயக்கலாம். டிராக்டரின் பின்புறம் இணைத்து தென்னந்தோப்பிற்குள் கொண்டு சென்று தென்னை மட்டைகள அங்காங்கே வெட்டி உரமாக எளிதில் மக்கச் செய்யலாம்.
இதனால் மடடைகளை ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இருமுறை இடமாற்றம் செய்யும் செலவு மிச்சமாகிறது. பவர் டில்லரை களத்தில் நிறுத்தி அதன் மூலமும் இயக்கலாம். 5 ஆயில் இன்ஜினை வைத்தும் இயக்கலாம்.
தங்களின் தேவைக்கேற்ப எங்களது இயந்திரத்தை மாற்றம் செய்து தருகிறொம். மண்புழு உரம் தயாரிக்கவும், மண்புழுவிற்கு தேவையான உணவு தயாரிக்கவும் இந்த இயந்திரம் மிகவம் சிறந்தது. எங்கள் தொழிற்சாலையில. எல்லா வேலை நாட்களிலும் இயந்திரங்களை இயக்கி செயல் விளக்கம் தருகிறோம்.